உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு பூவோடு எடுக்கும் நிகழ்வு துவக்கம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற செவ்வாய்க்கிழமை மாலை வரை பூவோடு எடுக்கும் நிகழ்வு நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 9-ம்தேதி பூச்செறிதல் நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது .இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியும், தேவாங்கர் சமூக நல மன்றத்தின் சார்பில் கொடியேற்றம் விழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றது.



இதற்கிடையில் நேற்று இரவு பூவோடு எடுக்கும் நிகழ்வு தொடங்கியது. இதற்காக கோவில் நிர்வாகத்தின் சார்பில் டோக்கன் வழங்கப்பட்டது. பக்தர்கள் வரிசையில் நின்று 250 ரூபாய் செலுத்தி டோக்கன் பெற்று பூவோடு எடுத்தனர். இன்று முதல் வருகின்ற செவ்வாய்க்கிழமை மாலை வரை பூவோடு எடுக்கும் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வெள்ளிக்கிழமை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாரியம்மன் கோவிலில் குவிந்தனர்.

மேலும் தேர் திருவிழாவுக்கு தினமும் கூட்டம் அதிகமாக மாரியம்மன் கோவிலுக்கு வருவதால் முக்கிய இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...