உடுமலை அருகே கொங்கலக்குறிச்சியில் சாலையோரம் திடீர் தீ விபத்து - புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதி

சாலையோரம் இருந்த புற்களில் திடீரென தீப்பற்றி எரியத்தொடங்கியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் அரைமணி நேரம் போராடி தண்ணீர் ஊற்றி தீயை கட்டுப்படுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கொங்கலக்குறிச்சி கிராமம் உடுமலை மூணாறு சாலையில் உள்ளது. இந்த நிலையில் இப்பகுதியில் இன்று சாலையோரம் அதிக அளவு புற்கள் இருந்த நிலையில் இன்று எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் அதிக அளவு புகைமூட்டம் இருந்த காரணத்தால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் கடும் பாதிப்படைந்தனர்.



இதற்கிடையில் தீ விபத்து குறித்து உடுமலை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையில் உடுமலை தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தண்ணீரை ஊற்றி தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...