கோவையில் ரயில் தடம் அருகே உள்ள குடியிருப்புகளில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக தகவல்

SIHS காலனி, இருகூர் ரயில்வே பாலம் உட்பட்ட 20 இடங்களில் 22 கேமராக்கள், ரத்தினபுரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட 6 இடங்களில் 12 கேமராக்கள், பீளமேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட 27 இடங்களில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.


கோவை: கோவை மாநகரில் ரயில் தடங்கள் அருகே உள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் சி.சி.டி.வி. கண்காணிப்பு இல்லை என்பதால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பது அண்மையில் நடந்த ஒரு சம்பவம் மூலம் வெளிவந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி அதிகாலை நேரத்தில், 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று பீளமேடு பூரணி நகர் பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபர் இல்லத்தில் ரூ.10 லட்சம், 30 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துவிட்டு அருகே உள்ள ரயில் தடம் வழியே சென்று தப்பித்துள்ளது. வெளிச்சம் இல்லாததாலும், கண்காணிப்பு இல்லாததாலும் எளிதில் அவர்கள் தப்பியுள்ளனர்.

இதையடுத்து கோவையில் ரயில் தடங்கள் அருகே உள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை பலப்படுத்த அதிநவீன சி.சி.டி.வி. கேமராக்கள் பொறுத்து முடிவெடுக்கப்பட்டு முதல் கட்டமாக 103 இடங்களில் இதை செய்ய கோவை மாநகர காவல் துறையினர் திட்டமிட்டு உள்ளனர். தண்டவாளம் உள்ள வழிநெடுகவே இந்த கேமராக்கள் பொறுத்தப்படவுள்ளன.

அதன்படி, சிங்காநல்லூர் காவல் நிலையத்துக்கு ஒண்டிப்புதூர், SIHS காலனி, இருகூர் ரயில்வே பாலம் உட்பட்ட 20 இடங்களில் 22 கேமராக்கள், ரத்தினபுரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட 6 இடங்களில் 12 கேமராக்கள், பீளமேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட 27 இடங்கள் மற்றும் போத்தனூர், துடியலூர், வடகோவை, இருகூர் ஆகிய இடங்களில் உள்ள பகுதிகளில் கார்ப்ரேட் சமூக பொறுப்பு நிதி (CSR) உதவியுடன் விரைவில் அமைக்கப்படவுள்ளது என்று தகவல் இன்று (ஏப்ரல்.18) வெளியாகியுள்ளது.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...