நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மெழுகுவர்த்தியில் தேர்தல் விழிப்புணர்வு - குனியமுத்தூர் UMT ராஜா அசத்தல்

மெழுகுவர்த்தியில் இந்தியன் வரைபடம், தேர்தல் லோகோ உள்ளிட்டவை வரைந்து, நாடு ஒளிர, நாளை உனது நாள் மறவாதீர் என குறிப்பிட்டு UMT ராஜா வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் வருகிற 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி அரசு மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த UMT ராஜா என்ற கலைஞர், இந்த தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் நேற்று (ஏப்ரல்.17) வெளியிட்டுள்ளார்.

அதில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி, மெழுகுவர்த்தியில் இந்தியன் வரைபடம், தேர்தல் லோகோ உள்ளிட்டவை வரைந்து, நாடு ஒளிர, நாளை உனது நாள் மறவாதீர் என குறிப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...