நம் தலைவர் கை காட்டுபவரே பிரதமராக வர வேண்டும் - கோவை சிவானந்தா காலனியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

தொழில்துறைக்கு பெயர்போன கோவையின் பெருமைகளை மீட்டெடுக்க, மாநில உரிமைகள் காக்க, பாசிச பாஜகவுக்கும், அவர்களின் அடிமைகளுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.


கோவை: கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கோவை சிவானந்தா காலனியில் இன்று (ஏப்ரல்.17) திமுக இளைஞர் அணி செயலாளர்-இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.



அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், தொழில்துறைக்கு பெயர்போன கோவையின் பெருமைகளை மீட்டெடுக்க, மாநில உரிமைகள் காக்க, பாசிச பாஜகவுக்கும், அவர்களின் அடிமைகளுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும். மேலும் தமிழ்நாட்டையும், தமிழர்களையும் நேசிக்கும் நம் தலைவர் கை காட்டுபவரே பிரதமராக வர வேண்டும். அதற்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கோவை சிவானந்தா காலனியில் ஆயிரக்கணக்கில் திரண்ட மக்களிடம் கூறி வாக்கு சேகரித்தார். உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...