தேர்தல் விழிப்புணர்வு குறித்து கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குறுந்தகடு வெளியீடு

எங்கெங்கெல்லாம் 60 சதவீதத்திற்கும் கீழ் வாக்குப்பதிவானதோ, அங்கு அழைப்புதல் தருவது, உறுதிமொழி எடுக்க வைப்பது போன்ற முன்னெடுப்புகளும் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.


கோவை: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெடுக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு குறித்து தொகுக்கப்பட்ட குறும்படங்கள் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது.



இதனை கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கிராந்திகுமார் பாடி வெளியிட்டார். மாவட்ட ஆட்சியர் வெளியிட மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பெற்று கொண்டனர்.



இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், எங்கெங்கெல்லாம் 60% க்கும் கீழ் வாக்குப்பதிவானதோ, அங்கு அழைப்புதல் தருவது, உறுதிமொழி எடுக்க வைப்பது போன்ற முன்னெடுப்புகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.



கோவை மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவு ஆவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் ஒரு சாமியானா, வீல் சேர், போன்ற குறிப்பிட்ட வசதிகள் இருப்பதற்கு அனைத்து துறை அலுவலர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...