திமுக வேட்பாளர் பிரகாசுக்கு ஆதரவு கேட்டு தாராபுரம் ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகளை சந்தித்த திமுகவினர்

முகமதியா நகரில் உலமா சபை தலைவர் முஜிபுர் ரஹ்மான் தாவூதியையும், உலமா சபை நிர்வாகிகளையும் சந்தித்து திமுக வேட்பாளர் பிரகாசுக்கு ஆதரவு அளிக்குமாறு தாராபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில் சென்று நிர்வாகிகள் வாக்கு கேட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் எதிர்வரும் ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாசை ஆதரித்து திமுகவினர் தாராபுரம் நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் நகர செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஈடுபட்டு வருகின்றனர்‌.

இந்நிலையில் தாராபுரம் ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகளை அதன் அலுவலகமான முகமதியா நகரில் வைத்து உலமா சபை தலைவர் முஜிபுர் ரஹ்மான் தாவூதியையும், உலமா சபை நிர்வாகிகளையும் தாராபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், கோவை மாநகர மாவட்ட துணை செயலாளருமான கோட்டை அப்பாஸ்தலைமையில் இன்று நகரச் செயலாளர் முருகானந்தம் நகர மன்ற தலைவர் பாப்புகண்ணன், மாவட்டத் துணைச் செயலாளர், கூட்டணி கட்சி நிர்வாகிகளான காங்கிரஸ் நகர தலைவர் செந்தில்குமார்,ஆகியோர் சந்தித்து இந்தியா கூட்டணி வேட்பாளர் கே.இ.பிரகாஷ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டனர்.



இந்நிகழ்வில் அயலக அணி மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லாஹ், ஆறாவது வார்டு கிளைக்கழக செயலாளர் அக்பர் பாஷா, ஐந்தாவது வார்டு பிரதிநிதி நாசர்உசேன், ஆறாவது வார்டு கவுன்சிலர் முபாரக் அலி, ஜீவா ஷாஜகான், பூத் பொறுப்பாளர்கள் மௌலானா, சையது இப்ராஹிம், ஜாபர் சாதிக், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் சிவசங்கர், நகர சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஏ.ஆர்.அபுதாகிர், 6வார்டு அவைத் தலைவர் அப்துல் ஹமீது, பேங்க் அப்பாஸ், கறிக்கடை அபூபக்கர் சித்திக், தாஜ் ஜாபர் சாதிக், பாவா மைதீன், முகமது தாரிக், தொண்டரணி ஷாஜகான், மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...