வெள்ளகோவிலில் பிஜேபி நிர்வாகி வீட்டில் வருமான‌ வரித்துறை சோதனை - ரூ.31 லட்சம் பணம் பறிமுதல்

கோயில் கட்டுவதற்காக சேர்த்து வைத்திருந்த ரூ.28 லட்சம் பணத்தையும், சொந்த செலவிற்காக வைத்திருந்த ரூ.3.5 லட்சம் பணத்தையும் வருமானவரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக பிஜேபி நிர்வாகி ஜவஹர் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உரிய ஆவணமின்றி பணத்தை எடுத்துச் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் தீத்தாம்பாளையம், பரப்புமேடு பகுதியை சேர்ந்த பிஜேபி கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டுப்பிரிவு மாவட்ட செயலாளர் ஜவஹர் என்பவரது வீட்டில் உரிய ஆவணங்களின்றி ரூ.31 லட்சத்து 74 ஆயிரத்து 200 ரொக்கப் பணம் வைத்திருப்பதாக திருப்பூர் மாவட்ட வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.‌

அதன் அடிப்படையில் வெள்ளகோவிலுள்ள அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மேலும் வீடு முழுக்க உள்ள அலமாரி, உள்பக்க அறைகள் மற்றும் வீட்டை சுற்றி தேடியதில் வீட்டின் உள்பக்க அறையில்சுமார் ரூ.31 லட்சத்து 74 ஆயிரத்து 200 ரொக்கப் பணம் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் போலிசாரின் முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட ரொக்கப் பணம் ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு சொந்தமான பணம்‌ என்பதும், அசோக்குமார், ஜவஹர்குமாரின் நண்பர் என்பதால் வெள்ளகோவில் பகுதிகளில் கோவில் திருப்பணிகள் செய்வதற்கு இந்த பணத்தை கொடுத்து வைத்திருந்ததாகவும் ஜவஹர் தெரிவித்தார்.



மேலும் இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டிய பணமா என்ற சந்தேகத்துடன் போலிசார் அடுத்த கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணத்தை திருப்பூர் மாவட்ட வருமான வரித்துறைத்தினர் காங்கேயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் மற்றும் வட்டாச்சியர் மயில்சாமி ஆகியோர் முன்னிலை எண்ணப்பட்டு‌ வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜவஹர் தரப்பில் தெரிவித்ததாவது, எனது வீட்டில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் வீட்டிலிருந்து இரண்டு வருட காலமாக எங்கள் பகுதியில் கோயில் கட்டுவதற்காக சேர்த்து வைத்திருந்த சுமார் 28 லட்சம் ரொக்க பணத்தையும், எனது சொந்த செலவிற்காக வைத்திருந்த சுமார் 3.5 லட்சம் ரொக்க பணத்தையும் முறையற்ற பணம் என கருதி எனது வீட்டிலிருந்து எடுத்துச் சென்றுள்ளனர். இந்த தொகை கடந்த இரண்டு வருட காலமாக கோயில் கட்டுவதற்காக சேர்த்து வைத்திருந்த பணம் எனவும், மேலும் இந்த பணத்திற்கும் வருகின்ற தேர்தலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என எழுத்துப்பூர்வமான கடிதத்தை அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...