திருப்பூர் தொழில் துறையினரை சந்திக்கும் முதல்வர் மு க ஸ்டாலின்..!

அவிநாசி, பழங்கரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா மற்றும் திருப்பூர் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.


திருப்பூர்: கோவையை அடுத்து இன்று திருப்பூரில், நீலகிரி மற்றும் திருப்பூர் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

அவிநாசி, பழங்கரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா மற்றும் திருப்பூர் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்கிறார்.

முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் உள்ள தொழில் துறையினருடன் கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளார்.பின்னலாடை, ஆயத்த ஆடை, பொறியியல் துறை சார்ந்த தொழில் முனைவோர் மற்றும் தொழில் அமைப்பினர், முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்கின்றனர். 

மூல பொருட்கள் விலையேற்றம், ஜிஎஸ்டி வரி, ஒன்றிய அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கை உள்ளிட்டவற்றால் கடும் நெருக்கடியில் திருப்பூர் தொழில் துறையினர் தத்தளித்து வரையும் நிலையில் இன்றைய கலந்துரையாடல் நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 

இந்த நிலையிலே தொழில்துறையின் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில், அவர்களின் குறைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிவார். 

அதேபோல, கோவை, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள தொழில் முனைவோர்,முதல்வரை திருப்பூரில் தங்கியுள்ள இடத்தில் சந்திக்கின்றனர்.

இந்த சந்திப்பில், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, வீட்டுவசதி வாரியதுறை அமைச்சர் முத்துசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜி கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...