காங்கேயத்தில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை ஆதரித்து பொள்ளாச்சி ஜெயராமன் வாக்கு சேகரிப்பு

என்னை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் உங்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் செய்து தருவேன் என அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வாக்குறுதியளித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட துர்க்கை அம்மன் கோவில், அய்யாசாமி நகர், மூர்த்திரெட்டி பாளையம், தட்டான் தோட்டம், களிமேடு, செம்மங்காலிபாளையம் ஆகிய பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் வாக்கு சேகரித்தார்.



நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் தலைமையில், என்.எஸ்.என்.நடராஜ் முன்னிலையில் நகர பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது பேசிய நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பேசுகையில், என்னை நாடாளுமன்ற உறுப்பினராக நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் உங்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் செய்து தருவேன் எனவும் கூறினார். உங்களுக்காக இன்னும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்துவதற்காக காத்திருக்கிறேன் என்றும் தெரிவித்தார். இதில், மாவட்ட பொருளாளர் கிஷோர் குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...