உடுமலை அருகே குமரலிங்கம் பகுதியில் துக்க வீட்டின் முன்பு நின்றிருந்தவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு

ரேஷன் பொருட்களை ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற டிராக்டர் மீது மோதிய விபத்தில் துக்க வீட்டின் முன்பு நின்றிருந்த செந்தில்குமாரி என்ற பெண் லாரிக்கு அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குமரலிங்கம் பகுதியில் உள்ள ஒரு துக்க வீட்டில் நேற்று உறவினர்கள் திரண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரேஷன் பொருட்கள் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற டிராக்டர் மீது மோதியது.



அத்துடன் துக்க வீட்டு முன்னாள் நின்றிருந்த பெண்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரிக்கு அடியில் சிக்கிய செந்தில்குமாரி (வயது 48) என்ற பெண் பரிதாபமாக பலியானார். மேலும் பலத்த காயமடைந்த ஈஸ்வரி, சுப்புலட்சுமி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த குமரலிங்கம் போலீசார் லாரியை ஓட்டி வந்த ஏரிப்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்தனர். உடுமலை அருகே துக்க வீட்டில் காத்திருந்தவர்கள் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்த சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...