உடுமலை அருகே அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளியில் ஆண்டு விழா மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சி

சைனிக் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் செழுமையான கலாச்சாரத்தை உள்ளடக்கிய பல்வேறு வகையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் காட்சிப்படுத்தப்பட்டன. 2023-24 கல்வி ஆண்டிற்கான ஒட்டுமொத்தசிறந்த அணிக்கான விருதை பல்லவா அணி வென்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அமராவதிநகரில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகின்ற சைனிக் பள்ளி உள்ளது.



இந்த பள்ளியின் 62-வது ஆண்டு விழா மற்றும் இறுதி அணிவகுப்பு விழா ஏப்ரல் 5 மற்றும் 6 ம் தேதி நடைபெற்றது.









5-ம் தேதி பள்ளியின் ஓவல் மைதானத்தில் குதிரை ஏற்றம் பாராசைலிங், சறுக்குதல், தற்காப்புக் கலைகள், யோகா, ஏரோபிக்ஸ், லெசிம் நடனம் மற்றும் சிலம்பம் ஆகிய நிகழ்ச்சிகள் பெற்றோருக்காக காட்சிப்படுத்தப்பட்டன.



அதைத் தொடர்ந்து பள்ளியின் 62-வது வருடம், 12-ம் வகுப்பு மாணவர்களின் பாசிங் அவுட் அணிவகுப்பு மேஜர் ஸ்ரீ ராம்குமார் ட்ரில் சதுக்கத்தில் 6- ம் தேதி காலை நடைபெற்றது.



அணிவகுப்பு மரியாதையை கோயம்புத்தூர் விமானப்படை நிர்வாக கல்லூரியின் கமாண்டன்ட் ஏர் கமடோர் விகாஸ் வாஹி வி.எஸ்.எம் ஏற்றுக் கொண்டார்.

கேடட் கனிஷ் கன்னா அணிவகுப்பு தளபதியாக இருந்தார். கேடட் எஸ் அஸ்வின் மற்றும் கேடட் எஸ்.வி. அகிலன் ஆகியோர் முறையே ஒட்டுமொத்த சிறந்த கேடட் மற்றும் சிறந்த ஒழுக்கதிற்கான கோப்பையை வென்றனர்.



செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், கணிதம், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல், மொழிழியல் மற்றும் கலைகள் பற்றிய கண்காட்சிகள் இரண்டு ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்த கண்காட்சியில் அனைத்து மாணவர்களும் மற்றும் பெற்றோர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்காக பள்ளி வளாகத்தில் புத்தகக் கண்காட்சியும் நடத்தப்பட்டது.



6-ம் தேதி மாலை பள்ளியின் அவ்வை அரங்கத்தில் நடைபெற்ற அமர்க்களம் 2023-24' கலைநிகழ்ச்சியுடன் இரண்டாம் விழா இனிதே நிறைவடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் செழுமையான கலாச்சாரத்தை உள்ளடக்கிய பல்வேறு வகையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் காட்சிப்படுத்தப்பட்டன. 2023-24 கல்வி ஆண்டிற்கான ஒட்டுமொத்தசிறந்த அணிக்கான ஒட்டுமொத்த விருதை பல்லவா அணி வென்றது.



விருதை தலைமை விருந்தினர் ஏர் கமடோர் விகாஸ் வாஹி வி.எஸ்.எம். பல்லவ அணிக்கு வழங்கினார். இரண்டு நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...