கோவையில் உள்ள ஏஜேகே கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா

மேலான குறிக்கோளுடன் சிறந்த முயற்சியும் மேற்கொண்டால் வாழ்வில் முன்னேற முடியும் என்று கல்லூரி விழாவில் தமிழக முன்னாள் காவல் தலைவர் முனைவர் சைலேந்திர பாபு பேசியுள்ளார்.


கோவை: கோவை பாலக்காடு சாலையில் அமைந்துள்ள ஏஜேகே கலை அறிவியல் கல்லூரியில் பதினேழாவது கல்லூரி ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் கல்லூரி வளாகத்தில் 04.04.2024 அன்று காலை நடைபெற்றது.



விழாவில் சிறப்பு விருந்தினராகத் தமிழக முன்னாள் காவல் தலைவர் முனைவர் சைலேந்திர பாபு கலந்துகொண்டு பல்வேறு இலக்கிய மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.

அப்போது பேசிய அவர், மேலான குறிக்கோளுடன் சிறந்த முயற்சியும் மேற்கொண்டால் வாழ்வில் முன்னேற முடியும் என்று அறிவுரை வழங்கினர். விழாவிற்கு தலைமை வகித்த கல்லூரியின் தலைவர் பேராசிரியர் முனைவர் அஜித் குமார் லால் மோகன் அவர்கள் பேசும்போது நல்ல கல்வி பெற்று வாழ்வில் சிறந்த மனிதர்களாக மாணவர்கள் உருவாக இக்கல்லூரி எப்போதும் துணை நிற்கும் என்று மாணவர்களுக்கு வாழ்த்துகளைக் கூறினார்.

முன்னதாகக் கல்லூரியின் முதல்வர் முனைவர். சீ.ராஜு வரவேற்புரையும், அதனைத் தொடர்ந்து ஆண்டறிக்கையும் வாசித்தார். தொடர்ச்சியாக பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்ற மூன்றாமாண்டு மாணவர்களுக்கு சுமார் 596 பணியாணைகள் முனைவர். சி. சைலேந்திர பாபு அவர்களால் வழங்கப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் சுமார் 1400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். உங்களைப்போல் உங்கள் பெற்றோர்களோ, முந்தைய தலைமுறையினரோ படித்திருக்கமாட்டார்கள். ஆனால் உங்களின் கல்விக்காக அவர்களின் தியாகம் மிகப் பெரியது. உங்கள் எதிர்கால வாழ்க்கை சுலபமானது அல்ல. அந்தச் சவால்களைச் சமாளிக்க இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களின் துணையோடு ஆயத்தமாகவேண்டும் என அறிவுறுத்தினார்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...