எடிட் செய்து வீடியோ வெளியீடு - புகார் அளிக்க இருப்பதாக திருப்பூரில் பாஜக வேட்பாளர் முருகானந்தம் விளக்கம்

பறக்கும்படை என்பவர்கள் தன்மையாக பேச வேண்டும். பறந்து யாரும் வரவில்லை. அவர்களும் மனிதர்கள் தான். நான் கடந்து செல்லும்போது ஒரு விவசாயிடம் ஒருமையில் பேசினார்கள். அதை பார்த்து மரியாதையாக பேசுமாறு கூறினேன் என்று பறக்கும் படையினரை மிரட்டியது தொடர்பான புகாருக்கு முருகானந்தம் விளக்கம் அளித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் நல்லூர், மனியாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக வேட்பாளர் முருகானந்தம் பிரசாரம் மேற்கொண்டார்.



அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் பேசியதாக வெளியான வீடியோ பாதியை எடிட் செய்து பாதியை போட்டு இருக்கிறார்கள். பறக்கும்படை என்பவர்கள் தன்மையாக பேச வேண்டும். பறந்து யாரும் வரவில்லை. அவர்களும் மனிதர்கள் தான். நான் கடந்து செல்லும்போது ஒரு விவசாயிடம் ஒருமையில் பேசினார்கள். அதை பார்த்து மரியாதையாக பேசுமாறு கூறினேன்.

அந்த காட்சியை பார்த்து விட்டு சும்மா போக முடியாது. அதனால் மரியாதையாக பேசுங்கள் என்று கூறியதாகவும், அதில் பாதி வீடியோவை எடிட் செய்து போட்டிருக்கிறார்கள். பறக்கும்படை கேமரா மேன் வீடியோவை ஐந்து நிமிடத்தில் ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கு அளித்திருப்தன் மூலம் திட்டமிட்டு இதை செய்கிறார்கள் என்பது தெரிகிறது. இதுகுறித்து நானும் புகார் அளிக்க உள்ளேன். தொடர்ந்து என்னை குறிவைத்து துன்புறுத்துவதன் காரணம் என்ன?. இதை சட்டப்படி அணுக இருப்பதாக கூறினார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...