தாராபுரம் பகுதியில் வாக்காளர்களுக்கு பாதுகாப்பு உறுதி குறித்த கொடி அணிவகுப்பு

தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்கள் தேர்தல் நாளான்று, சட்ட ஒழுங்கு பிரச்சனையின்றி, பாதுகாப்பான முறையில் வாக்களிக்கலாம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சிறப்புக்காவலர்களின் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.


திருப்பூர்: வரவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாகவும் தாராபுரத்தில் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. வருகின்ற 19 -ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பல்வேறு விதமாக பலப்படுத்தப்பட்டு வருகின்றது.



இதன் ஒரு பகுதியாக தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்கள் தேர்தல் நாளான்று, சட்ட ஒழுங்கு பிரச்சனையின்றி, பாதுகாப்பான முறையில் வாக்களிக்கலாம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சிறப்புக்காவலர்கள் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இப்பேரணியை தாராபுரம் வடக்கு காமராஜபுரம் பகுதியில் இருந்து காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன் துவக்கி வைத்தார்.



இதையடுத்து பேரணி, பெரிய கடைவீதி , ஜவுளிக்கடை வீதி பூக்கடைக்காரர் பொள்ளாச்சி சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் மற்றும் அலங்கியம் சாலை வரை பேரணி நடைபெற்றது. இதில் தாராபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர், ஐந்து ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 40 போலீசார் மற்றும் குஜராத் ஆயுத படை போலீசார் என மொத்தம் 100 பேர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...