உடுமலை அருகே ஆண்டியகவுண்டனூரில் பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து- ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம்

எந்திரங்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக பஞ்சு மில்லில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஏற்றுமதிக்கு தயாராக இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான 20 ஆயிரம் கிலோ பஞ்சுகள் எரிந்து நாசமானது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சி பகுதியில் செல்வகுமார் என்பவர் கழுவு பஞ்சு தொழிற்சாலை நடத்தி வருகின்றார். இன்று வழக்கம் போல் நூற்பாலை இயங்கிக் கொண்டு இருந்தது. அப்போது எந்திரங்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எழுந்த காரணத்தால் பணி புரிந்து கொண்டிருந்த ஊழியர்கள் அலறி எடுத்து ஓட்டம் பிடித்தனர்.



பின்னர் சம்பவத்துக்கு வந்த உடுமலை தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி அமைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் ஏற்றுமதிக்கு தயாராக இருந்த 20 லட்சம் மதிப்பிலான 20 ஆயிரம் கிலோ பஞ்சுகள் எரிந்து நாசமானது.



இந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டவுடன் ஊழியர்கள் வெளியே ஓடிவரும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது. தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். உடுமலை அருகே கழிவு பஞ்சு நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஊழியர்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...