பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமல் அதிமுக, திமுக பரப்புரை - மடத்துக்குளத்தில் பாஜக வேட்பாளர் பேச்சு

முள்ளங்கி வலசு, காரத்தொழுவு, வஞ்சிபுரம், கணியூர், கடத்தூர், ஜோத்தம்பட்டி, சிலநாயக்கன்பட்டி, மலையாண்டிபட்டினம் ஆகிய கிராமங்களில் பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் வாக்கு சேகரித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முள்ளங்கி வலசு, காரத்தொழுவு, வஞ்சிபுரம், கணியூர், கடத்தூர், ஜோத்தம்பட்டி, சிலநாயக்கன்பட்டி, மலையாண்டிபட்டினம் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் தாமரை சின்னத்திற்கு பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்தார்.



அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவினர் பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமல் பரப்புறையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாரதப் பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டங்களை தாங்கள் கொண்டு வந்ததாக திமுகவினர் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தற்பொழுது பொதுமக்களுக்கு கூலி உயர்வு அதிகப்படுத்தப்பட்டுள்ளது .

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஊராட்சி செயலாளர்கள் மூலம் வழங்கப்பட்ட தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் இனி வருங்காலங்களில் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் வர வைக்கப்படும். எனக்கு வாய்ப்பளித்தால் ஆனைமலை நல்லாறு பாசன திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவேன், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தப்படும், பொள்ளாச்சி மற்றும் உடுமலையில் மத்திய அரசின் பாஸ்போர்ட் சேவை அலுவலகங்கள் அமைக்கப்படும், பொள்ளாச்சியில் மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரி அலுவலகம் உறுதியாக அமைக்கப்படும், உடுமலை மடத்துக்குளம் தொகுதியில் கரும்பு விவசாயிகளுக்காக அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை தற்போது நிதி இல்லாமல் அரவை நிறுத்தப்பட்டுள்ளது. ஆலைக்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் பெற்று ஆலை செயல்படுத்தப்படும், உடுமலை பகுதியில் விவசாய பொருட்களை பாதுகாக்க குளிர் சேமிப்புக் கிடங்கு தொடங்கப்படும் உட்பட பல்வேறு வாக்குறுதிகள் பொதுமக்களிடையே தெரிவித்தார் .

வாக்கு சேகரிப்பின் போது திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி, மாவட்ட பொதுசெயலாளர் வடுகநாதன், மாநில விவசாய அணி செயலாளர் மௌன குருசாமி, கூட்டணி கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் இரா. பழனிச்சாமி, உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், குமரலிங்கம் பேரூர் கழகச் செயலாளர் வெங்கட் உட்பட பாஜக, பாமக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...