தேர்தல் செலவினப் பார்வையாளர்களின் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள்/ வேட்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுக்கான தேர்தல் செலவினப் பார்வையாளர்களின் ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் வரும் 5, 10 மற்றும் 16ஆம் தேதி ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.


கோவை: கோவை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி (ஏப்ரல்.3) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை நாடாளுமன்றத் தொகுதியில் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள்/ வேட்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுக்கான தேர்தல் செலவினப் பார்வையாளர்களின் ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் (05.04.2024, 10.04.2024, 16.04.2024) ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

அதன்படி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள்/ வேட்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களும் மக்களவை பொதுத் தேர்தலுக்காக, அனைத்து பில்கள், வவுச்சர்கள், மற்றும் தேர்தல் செலவினத்திற்காக தனி வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட தேர்தல் செலவினங்கள் தொடர்பான உரிய கணக்குகளுக்கான பதிவேடுகளுடன் அனைத்து வேட்பாளர்கள்/ வேட்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களும் பின்வரும் நாட்களில் புகைப்பட அடையாளத்துடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இரண்டாம் தளத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...