வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பொள்ளாச்சியில் கொடி அணிவகுப்பு

மக்களவை தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் மத்திய துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.


கோவை: தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19.ஆம் தேதி ஒரே கட்டமாக நடைப்பெறவுள்ள நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் உள்ள பொள்ளாச்சி நகர் பகுதியில் தேர்தல் பணி பாதுகாப்பிற்றாக 100 க்கு மேற்பட்ட மத்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணிகளுக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.



மேலும் வரும் ஏப்ரல் 19.ம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் மத்திய துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.



இந்த பேரணி கோவை சாலையில் உள்ள மகாலிங்கபுரம் பகுதியில் தொடங்கி காந்தி சிலை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வெங்கட்ராமன் பள்ளி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக இந்த அணிவகுப்பு நடைபெற்றது.



இதில் மத்திய துணை ராணுவ படை மற்றும் காவல் துறையினர் என 485 பேர் கலந்துகொண்டு பாலக்காடு சாலையில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில் அணிவகுப்பு பேரணி நிறைவடைந்தது.



பின்னர் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது வரும் பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் எனவும் 100 சதவீதம் வாக்குபதிவை உறுதி செய்து பொதுமக்கள் அச்சமின்றி தங்களது ஜனநாயக கடமை மேலும் கோவை மாவட்டத்தில் பதட்டமாக உள்ள வாக்குச்சாவடிகளில் காவல்துறையினர் மற்றும் மத்திய துணை ராணுவப் படையினர் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...