தாராபுரத்தில் பிரச்சாரம் செய்ய வந்த திமுக வேட்பாளர் பிரகாஷூக்கு கருப்பு கொடி காட்டி விவசாயிகள் எதிர்ப்பு

ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ், அமைச்சர் கயல்வியுடன் தேர்பாதை என்ற இடத்திற்கு பிரச்சாரம் செய்வதற்காக வந்தார். அப்போது, கருப்புக்கொடி காட்டி விவசாயிகள் அணைக்கு தண்ணீர் கொடு இல்லையென்றால் வெளியேறு என கோஷமிட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ளது உப்பாறு அணை. இந்த அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து உபரி நீரை அரசூர் சட்ட வழியாக திறந்து விடுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஓர் ஆண்டாக தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி பாசன விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் இடம் ஏழு முறை பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். ஆனால் ஒருமுறை கூட கலெக்டர் உப்பாறு பாசன விவசாயிகள் இடம் பேசவில்லை. இதனால் நீதி கிடைக்க வேண்டும் என உப்பாறு பாசன விவசாயிகள் கெத்தல்ரேவ், தேர்பாதை, பனமரத்து பாளையம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், தொப்பம்பட்டி, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகள், தோட்டங்கள், வணிக நிறுவனங்களில் கருப்பு கொடி கட்டியும் , வராதே! வராதே! ஓட்டுக் கேட்டு ஊருக்குள்ளே வராதே! உப்பாறு அணைக்கு உயிர் நீர் கேட்டு போராடும் போது வராதவர்கள். இன்று, உங்கள் தேவைக்கு ஓட்டுக் கேட்க மட்டும் வராதே!வராதே! ஓட்டுக் கேட்டு யாரும் ஊருக்குள்ளே வராதே என்ற வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்களை கட்டி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.



இந்த நிலையில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் அமைச்சர் கயல்வியுடன் தேர்பாதை என்ற இடத்திற்கு தற்போது பிரச்சாரம் செய்வதற்காக வந்தார். அப்போது அங்கு காத்திருந்த உப்பாறு பாசன விவசாயிகள் கையில் கருப்புக்கொடி காட்டி அணைக்கு தண்ணீர் கொடு இல்லையென்றால் வெளியேறு என கோஷமிட்டவாரு தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர்‌.



இதனை தொடர்ந்து தாராபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி கோரி வந்தார். இந்த நிலையில் வேட்பாளர் பிரகாஷ் ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு அங்கிருந்து அவசர அவசரமாக பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு சென்றார். இதனால் தாராபுரம்-பூளவாடி சாலை தேர்பாதை என்ற இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...