வீரபாண்டி கிராமத்தில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பிரச்சாரம்

தடாகம் மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி, பி.ஆர்.ஜி. அருண்குமார் ஆகியோர் பெயரில் அர்ச்சனை செய்து அங்கிருந்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் வாக்கு சேகரித்தார்.


கோவை: கோவை அதிமுக சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரன் சின்ன தடாகம், மாங்கரை, வீரபாண்டி, ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் உடன் இணைந்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.



இதில் சின்ன தடாகம் அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தில் வாக்கு சேகரிக்கும் போது அங்கிருந்த பொதுமக்களுடைய பேசிய வேட்பாளர் ராமச்சந்திரன், தான் இதே பகுதியைச் சேர்ந்த வேட்பாளர் என்றும், தனக்கு வாக்களித்தால் எப்பொழுது வேண்டுமென்றால் சந்திக்கலாம் என்றும், உங்களுக்காக பாராளுமன்றத்தில் எனக்கு ஒதுக்கப்படும் இருக்கையில் இருந்து உங்களுக்காக குரல் கொடுப்பேன் என்று தெரிவித்தார்.

தனது செல் நம்பர் அனைவருக்கும் தெரியும் என்றும், எப்போது வேண்டுமானாலும் எனது செல் நம்பருக்கு போன் செய்யலாம் ஒரு வேலை எடுக்காமல் இருந்தாலும் ஒரு நாளில் திரும்ப அழைப்பேன் என்றும் எக்காரணத்தைக் கொண்டும் மிஸ்டு கால் ஆகாது என்று தெரிவித்தார்.



முன்னதாக தடாகம் மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்ட சிங்கை ராமச்சந்திரன் எடப்பாடி பழனிசாமி எஸ்.பி. வேலுமணி, பி.ஆர்.ஜி. அருண்குமார் ஆகியோர் பெயரில் அர்ச்சனை செய்து அங்கிருந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார்.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...