அவிநாசி சாலை மேம்பால பணிகள் முடிய டிசம்பர் அல்லது ஜனவரி ஆகலாம் என தகவல்

ஏறு தளம், இறங்கு தளம் அமைத்தல் உள்பட சில பணிகள் உள்ளன. ஹோப்ஸ் பகுதியில், ரயில்வே தடம் கீழே உள்ளதால், அங்கு ஏற்கனவே சிறு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: உப்பிலிபாளையம் சிக்னல் துவங்கி கோல்ட்வின்ஸ் வரை 10.1 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டு வரும் அவிநாசி சாலை மேம்பால கட்டுமான பணிகளை முடிக்க ஒப்பந்தப்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை தான் அவகாசம் உள்ளது ஏன்றாலும் இன்னும் பல பணிகள் பாக்கி உள்ளன.

மொத்தம் அமைக்கவேண்டிய 304 டெக் ஸ்லாப்களில் இதுவரை 212 டெக் ஸ்லாப்கள் மேலே பொறுத்தப்பட்டுவிட்டன. இன்னும் 92 தான் உள்ளது. 305 தூண்களில் 298 அமைக்கப்பட்டுவிட்டது. இன்னும் 7 தூண்கள் மட்டுமே உள்ளன. 10.1 கிலோமீட்டருக்கு மேம்பாலத்தில் சாலை பகுதி அமைக்கப்படவேண்டும்.

இதில் 6.1 கிலோமீட்டர் சாலைக்கான மேற்பரப்பு அமைக்கப்பட்டுவிட்டது. இன்னும் ஏறு தளம், இறங்கு தளம் அமைத்தல் உள்பட சில பணிகள் உள்ளன. ஹோப்ஸ் பகுதியில், ரயில்வே தடம் கீழே உள்ளதால், அங்கு ஏற்கனவே சிறு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு உயர்மட்ட மேம்பாலத்திற்கான தூண் அமைப்பது சிக்கல் என்பதால் இந்த பகுதிக்கு நடுவே முன்னும் பின்னும் நெருக்கமாக உள்ள இரண்டு தூண்கள் இடையே 51 மீட்டர் நீளத்திற்கு இணைப்பு பாலம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

பின்னர் அதற்கு ரயில்வே துறை அனுமதி வழங்கியதை அடுத்து, அங்கு முதலில் அதற்கான சோதனை பணிகள் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. அங்கு அமையவுள்ள இணைப்பு பாலத்தின் வடிவமைப்புக்கு ரயில்வே அனுமதி வழங்கியதால் விரைவில் பணிகள் துவங்க உள்ளது. எனவே இதுபோன்ற பணிகள் மீதம் இருப்பதால் இவற்றை முடித்திட குறைந்தது 4 மாதங்கள் ஆகும். இதன்காரணமாக மேம்பால பணிகள் டிசம்பர் 2024 அல்லது ஜனவரி 2025ல் தான் நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...