உக்கடம்-ஆத்துபாலம் மேம்பால பணிகள் 90 சதவீதம் நிறைவு- ஏப்ரல் முதல் வாரத்தில் சோதனை ஓட்டம்

பொள்ளாச்சி சாலையில் உள்ள ஏறு/இறங்கு தளங்கள் 15 நாட்களில் நிறைவடையவும், சுங்கம் பைபாஸ் சாலையில் இருந்து வாலாங்குளம் வழியாக அமையும் ஏறு/இறங்கு தளங்கள் 2-3 மாதங்களில் கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


கோவை: உக்கடம்-ஆத்துபாலம் மேம்பால பணிகள் 90% மேல் நிறைவடைந்துள்ளதால் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் மேம்பாலத்தின் ஒருபகுதி பொது சோதனை ஓட்டத்திற்காக திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்போது மேம்பாலத்தின் மேற்பகுதி வேலைகளும், உக்கடம் சந்திப்பில் உள்ள ஏறு/ இறங்கு தள பணிகளும் நிறைவடைந்து உள்ளநிலையில் பிற ஏறு/ இறங்கு தளங்கள் அமைக்கும் பணி மீதம் உள்ளது.பாலக்காடு சாலையில் இருந்து உக்கடம் நோக்கி உள்ள பகுதியில் அமைக்கப்பட்டு வரும் ஏறு தளம் நிறைவடைய உள்ளது.

அதே பகுதியில் உள்ள இறங்கு தளம் சில நாட்களில் முடிவடையும்.அதேபோல பொள்ளாச்சி சாலையில் உள்ள ஏறு/இறங்கு தளங்கள் 15 நாட்களில் நிறைவடையவும், சுங்கம் பைபாஸ் சாலையில் இருந்து வாலாங்குளம் வழியாக அமையும் ஏறு/இறங்கு தளங்கள் 2-3 மாதங்களில் கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...