உடுமலை அருகே குரல்குட்டையில் திமுக வேட்பாளரை ஆதரித்து குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் சேலம் கோவிந்தன் பிரச்சாரம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் கை காட்டுபவர் தான் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். மோடி இன்னொருமுறை பிரதமராக வந்தால் நாடு தாங்காது. அனைவருக்கும் உரிமைத் தொகை கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின்' என்று குடுகுடுப்பை அடித்தபடி சேலம் கோவிந்தன் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு வாக்கு சேகரித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குரல்குட்டையில் திமுகவை சேர்ந்த சேலம் கோவிந்தன் என்பவர் குடுகுடுப்பைகாரர் வேடத்தில் தி.மு.க வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து ஒட்டுசேகரித்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் குடுகுடுப்பைக்காரன் வேடத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுவரும் இவர் அதன் ஒரு பகுதியாக குரல்குட்டையில் தி.மு.க சுற்றுசூழல் ஆர்வலர் குரல்குட்டை ராமசாமி தலைமையில் வீடு வீடாக சென்று குடுகுடுப்பை பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

தனது பிரச்சாரத்தில் 'இந்த தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கை காட்டுபவர் தான் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார், மோடி இன்னொருமுறை பிரதமராக வந்தால் நாடு தாங்காது, அனைவருக்கும் உரிமைத் தொகை கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின்' என்று குடுகுடுப்பை அடித்தபடி இவர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.



கோவிந்தனின் இந்த நூதன முறை பிரச்சாரம் மக்களை ரசிக்க வைப்பது மட்டுமின்றி மக்கள் மத்தியில் வரவேற்பும் பெற்றுள்ளது. குடுகுடுப்பை சத்தம் கேட்டவுடன் தன்னையும் அறியாமல் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து இரு கரம் கூப்பி அவரது பிரச்சாரத்தை கேட்டனர்.

Newsletter

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...