கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை எனக்கூறி காங்கேயம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்

கடைமடையான சுமார் 4 ஆயிரம் ஏக்கருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று வரை சென்று அடையவில்லை என்றும், இதற்கு அதிகாரிகள் முறையான பதில் அளிக்கவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருமூர்த்தி அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வெள்ளகோவில் வரை உள்ள கடைமடை பகுதிக்கு பிஏபி வாய்க்கால் தண்ணீர் வரவில்லை என்று கூறி விவசாயிகள் இரவு காங்கேயம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருமூர்த்தி அணையில் இருந்து முதலாம் மண்டலத்தில் 2வது சுற்று பாயக்கூடிய பிஏபி வாய்க்காலில் பாசன தண்ணீர் திறக்கப்பட்டு இரண்டு நாட்கள் முடிவடைந்த நிலையில் கடைமடைக்கு தற்போது வரை தண்ணீர் வந்து சேரவில்லை. திருமூர்த்தி அணையில் இருந்து சுமார் 126 கிலோ மீட்டர் தொலைவில் காங்கேயம் சென்னிமலை சாலையில் 6.09 கிலோ மீட்டரில் அமைந்துள்ள கடைமடைக்கு உரிய தண்ணீர் வரவில்லை.



எனவே இரண்டாவது சுற்றில் பாயக்கூடிய முதல் 4 ஆயிரம் பரப்பளவு ஏக்கர் பாசன விவசாய பூமி தற்போது வறட்சியை கண்டுள்ளது. எனவே விவசாயிகள் பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு மேற்பார்வையிட்ட அதிகாரிகள் முறையான பதிலும், நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தற்போது பிஏபி விவசாயிகள் திருப்பூர் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள்‌ கூறியதாவது, முதல் மண்டலம் இரண்டாம் சுற்றில் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு பாசனம் வசதி பெற வேண்டும். ஆனால் கடைமடையான சுமார் 4 ஆயிரம் ஏக்கருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று வரை சென்று அடையவில்லை. இதற்கான முறையான பதிலும் அதிகாரிகள் அளிக்கவில்லை. எனவே நாங்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளோம். மேலும் உரிய பதில் கிடைக்காத பட்சத்தில் காங்கேயம் காவல் நிலையம் சென்று இந்த அபரிமிதமான தண்ணீர் திருட்டை தடுக்கவும், இப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிஏபி விவசாயிகள் சார்பில் புகார் அளிக்க உள்ளோம். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கையாக உள்ளிருப்பு போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தற்போது வரை சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உள்ளிருப்பு போராட்டத்தை துவங்கி உள்ளனர்.‌ மேலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை கேட்டு பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வந்தவண்ணம் உள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...