கோவை மாவட்டம் மதுக்கரை பகுதிகளில் களைச் செடிகளை அகற்றும் பணிகள் தொடக்கம்

90 ஹெக்டர் சீமை கருவேல மரங்களும், 50 ஹெக்டேர் உன்னி செடிகளும் அகற்றப்பட உள்ளது. தேவையற்ற களை செடிகளும் அகற்றப்படுகின்றன. இதனால், இருப்புப்பாதை அருகில் வனவிலங்குகள் வருவது தெளிவாக தெரியும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்ட வன அலுவலரின் உத்தரவின் பேரில், மதுக்கரை வனசரகம் நவக்கரை பிரிவு, சோளக்கரை சுற்றுப்புற பகுதிகள், ரயில் இருப்பு பாதை அருகில் உள்ள களைச் செடிகளான சீமை கருவேல மரம் மற்றும் உன்னிச் செடிகள் இன்று (மார்ச்.30) அகற்றப்பட்டு வருகிறது.

அதன்படி 90 ஹெக்டர் சீமை கருவேல மரங்களும், 50 ஹெக்டேர் உன்னி செடிகளும் அகற்றப்பட உள்ளது. அதுமட்டுமின்றி தேவையற்ற களை செடிகளும் அகற்றப்படுகின்றன. இதன் மூலம் வனவிலங்குகள் ரயில்வே இருப்புப்பாதை அருகில் வந்தால் இருப்புப் பாதை காவலர்களுக்கு எளிதாக தெரியும் எனவும், யானைகள் மற்றும் மற்ற வனவிலங்குகளின் நகர்வு தொடர்ச்சியாக கண்காணிக்க எளிதாக இருக்கும் எனவும், வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...