100 சதவீதம் வாக்களிப்பு:  மாற்றுத்திறனாளிகள் உறுதிமொழி ஏற்பு..!

பார்வை குறைபாடுடைய  மாற்றுத்திறனாளிகள், தேர்தல் விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி  முன்னிலையில் எடுத்துக் கொண்டனர்.


கோவை: 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று (26.03.2024) மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

நிகழ்ச்சியில், பார்வை குறைபாடுடையமாற்றுத்திறனாளிகள் தேர்தல் விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடிமுன்னிலையில் எடுத்துக் கொண்டனர். 



இன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் மோ.ஷர்மிளா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

மாற்றுத்திறனாளிகள் மத்தியில் 100% வாக்களிப்பதை ஊக்குவிக்கும் முயற்சியில், சென்னை மாநகராட்சி பல்வேறு மாற்றுத்திறனாளிகள் மத்தியில் இருந்துபிரதிநிதிகளை தெரிந்தெடுத்து, அவர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் (பார்வை குறைபாடு, தொழு நோயிலிருந்து மீண்டவர்கள், செவித்திறன் குறைபாடு, லோகோ மோட்டர் குறைபாடு, ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம், மல்டிபிள் ஸ்களீரோசிஸ்) என 21 வகையான குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் சிரமமின்றி வாக்களிக்க உதவுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...