காங்கேயம் அருகே மடவிளாகம் ஆருத்ரா கபாலீஸ்வரர், ரகுபதி நாராயண பெருமாள் கோவில் தேரோட்டம்

2500க்கும் அதிகமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் திருவிழாவில் பாதுகாப்பு பணிகளை காங்கேயம் காவல்துறையினர் செய்திருந்தனர்.


திருப்பூர்: காங்கேயம் அருகே உள்ள மடவிளாகம் ஆருத்ரா கபாலீஸ்வரர், ரகுபதி நாராயண பெருமாள் கோவில்களில் நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது.

இதில் 2500க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இக்கோயில்களில் இந்த ஆண்டுக்கான பங்குனி மாத தேர் திருவிழா கடந்த 17ஆம் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும் 18ஆம் தேதி கொடியேற்றமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

இதில் வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் தேர், ஸ்ரீதேவி, பூமாதேவி, சமேத ரகுபதி நாராயண பெருமாள் தேர், கணபதி தேர், பிரகலநாயகி அம்மன் தேர் என நான்கு தேர் முன்னாள் செல்ல பெரிய தேரில் சோமாஸ்கந்தர் எழுந்தருளினார். ஒரு கிலோ மீட்டர் தூரம் கோவிலை சுற்றி தேர் வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் 2500 க்கும் அதிகமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் திருவிழாவில் பாதுகாப்பு பணிகளை காங்கேயம் காவல்துறையினர் செய்திருந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...