விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கைது

மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோவை மணிகூண்டு பகுதியில் இந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

போராட்டத்தின் போது, மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். அப்போது அங்கு வந்த போலிசார் மாணவர்களை கைது செய்ய முயன்றனர். ஆனால், கைதாக மறுத்த மாணவர்கள் தொடர்ந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். 



தொடர்ந்து, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தினேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'டெல்லியில் 17வது நாளாக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் தற்போது சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகிறோம். ஹைட்ரோகார்பன் திட்ட்ச்த்திற்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் இருந்தும் அதை கையெழுத்திட்டமைக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு, உடனடியாக அந்த திட்டத்தை வாபஸ் பெற வேண்டும். இல்லையேல் தொடர்ந்து எங்கள் போராட்டம் நடைபெறும்'என்றார். 



இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 27 பேரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...