கவுண்டம்பாளையம் திமுக அலுவலகத்தில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர்.ரவி, தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் தேர்தலுக்காக முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.


கோவை: கோவை வடக்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கவுண்டம்பாளையம் பகுதி திமுக கழக அலுவலகத்தில் இன்று (மார்ச்.19) நடைபெற்றது.



இக்கூட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர்.ரவி, தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் தேர்தலுக்காக முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்த கருத்துக்களை திமுக நிர்வாகிகளுடன் பரிமாறிக் கொண்டனர். உடன் திமுக கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

இதேபோல், கோவை பாராளுமன்றத்திற்குட்பட்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி DMK ITWing கலந்தாலோசனை கூட்டம் நேற்று (மார்ச்.18) கவுண்டம்பாளையம் பகுதி கழகத்தில் நடைபெற்றது. இதில் தேர்தல் களத்தில் தொகுதியில் செய்ய வேண்டிய சமூக ஊடக பிரச்சாரம் குறித்து மாநில மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி முன்னிலையில் திட்டமிடப்பட்டது.



உடன் தமிழ்மறை, மாவட்ட கழக துணைச் செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி, ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ், பகுதி கழக செயலாளர் சகோதரர் சரத் விக்னேஷ், பேரூர் கழக செயலாளர் சுரேந்திரன், மாவட்ட சிறுபாண்மை அணி அமைப்பாளர் ஆரோக்கிய ஜான், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் ஹரிஷ் மற்றும் மாவட்ட துணை, தொகுதி, பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...