பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுக்க நீதிமன்றத்தில் தடையாணை பெற தவறிய தமிழக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்


கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுக்க உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெறத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து கோவையில் பவானி தடுப்பணை தடுப்பு குழுவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சக்கண்டி உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பணை கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையிலும், கேரள அரசு கட்டுமான பணிகளை நடத்தி வருகிறது.

இதனிடையே தேக்குவட்டை பகுதியில் தடுப்பணை கட்டுமான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மஞ்சக்கண்டியிலும் தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு துரிதப்படுத்தியுள்ளது.

கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணிகளை மேற்கொள்வதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுக்க உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெறத் தவறிய தமிழக அரசை கண்டித்து, கோவை சிவானந்தா காலணி பகுதியில் பவானி தடுப்பணை தடுப்பு குழுவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் கலந்து கொண்டன. இப்போராட்டத்தில், கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையாக வழக்கு நடத்தி தடையாணை பெற தவறி விட்டதாகவும், கேரள அரசிற்கு சாதகமாக தமிழக அரசு நடந்து கொண்டதால் தொடர்ந்து கேரள அரசு தடுப்பணை கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.

பவானி தடுப்பணை விவகாரம் தொடர்பாக ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...