பொள்ளாச்சியை அடுத்த டாப்ஸ்லிப் சாலையில் குட்டிகளுடன் உலாவும் காட்டெருமை – கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை

இன்று காலையில் டாப்ஸ்லிப் சாலையில் குட்டிகளுடன் காட்டெருமை கூட்டம் உலா வந்து சாலையின் குறுக்கே நின்றது. இதனால் அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையை கடக்க முடியாமல் பாதிவழியிலேயே நிற்க நேரிட்டது.


கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், யானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில் தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் உணவு மற்றும் தண்ணீருக்காக வனவிலங்குகள் அவ்வப்போது பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளின் உலா வருகின்றன.

இந்நிலையில் இன்று காலை டாப்ஸ்லிப் சாலையில் குட்டிகளுடன் காட்டெருமை கூட்டம் உலா வந்து சாலையின் குறுக்கே நின்றது. இதனால் அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையில் கடக்க முடியாமல் நின்றது. இதனால் இவ்வழியாக பயணிக்க முடியாமல் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை புகைப்படம் எடுக்குவோ செல்பி எடுக்கவோ அருகில் சென்று தொடவோ முயற்சிக்க வேண்டாம் எனவும், வனவிலங்குகளை துன்புறுத்தக் கூடாது எனவும் கவனமாக வன பாதையை கடக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...