கோவையில் கடும் வெயிலால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்பு – ஒரு கிலோ பட்டுக்கூடு ரூ.500-க்கு விற்பனை

இன்று (14-03-2024) ஒருகிலோ பட்டுக்கூடு விலை குறைந்தபட்சமாக ரூ.340-க்கும், சராசரியாக ரூ.432-க்கும், அதிகப்பட்டசமாக ரூ.500-க்கும் ஏலம் போனது என்று பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் பட்டுக்கூடு உற்பத்தியில் கணிசமான விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், அன்னூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட

இடங்களில் பட்டுப்புழுக்களை வளர்த்து பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்கிறார்கள்.

அவ்வாறு உற்பத்தி செய்யும் பட்டுக்கூடுகளை கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள பட்டுவளர்ச்சித்துறை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடு அங்காடியில் விற்று வருவாயை பெருக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் பட்டுக்கூடுகள் கடந்த மாதம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ.370-க்கும், அதிகபட்சமாக ரூ.475 வரைக்கும் விற்றது. இந்த நிலையில் தற்போது இதன் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ ரூ.500-க்கு விற்கிறது. இதனால் விவசாயிகள் பலர் பட்டுக்கூடுகளை அதிகம் உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

பட்டுக்கூடு விலை உயர்வு குறித்து பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், கோவை பட்டுக்கூடு விற்பனை அங்காடிக்கு கோவை மட்டுமின்றி திருப்பூர் மாவட்டம் அவினாசி, உடுமலைப்பேட்டை, திண்டுக்கல் மாவட்டம் பழனி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகிறார்கள்.

வழக்கமாக பட்டு நூல் விலை அதிகமாக இருக்கும் போது பட்டுக்கூடு விலையும் அதிகரிக்கும். ஆனால் தற்போது பட்டுநூலின் விலை குறைந்து உள்ளது. இருந்தபோதிலும் கடும் வெயில்

காரணமாக பட்டுக்கூடு உற்பத்தி வெகுவாக குறைந்து உள்ளது. இதன் காரணமாக பட்டுக்கூடு விலை கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக உயர்ந்து உள்ளது.

அதன்படி இன்று (14-03-2024) ஒருகிலோ பட்டுக்கூடு விலை குறைந்தபட்சமாக ரூ.340-க்கும், சராசரியாக ரூ.432-க்கும், அதிகப்பட்டசமாக ரூ.500-க்கும் ஏலம் போனது என்றனர். பட்டுக்கூடு விலை ஏறுமுகத்தில் உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...