மடத்துக்குளம் அருகே துங்காவி கிராமத்தில் கிராமப்புற பெண்கள் தொழில் முனைவோர் மையம் துவக்க விழா

வீட்டு மின்சாதன பொருட்கள் சரியான முறையில் கையாளுதல் மற்றும் பழுதுபார்த்தல், சோப்பு, சலவைத்தூள், பினாயில் முதலான வீட்டு உபயோக பொருட்கள் செய்முறை, கைவினைப் பொருட்கள் செய்முறை கணிப்பொறி பயன்பாடு போன்ற பயிற்சிகள் கொடுக்கப்படும் என்று இணை பேராசிரியர் முனைவர் அறம் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே துங்காவி கிராமத்தில் ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி சார்பில் கிராமப்புற பெண்கள் தொழில் முனைவோர் மையத்தின் துவக்க விழா இன்று நடைப்பெற்றது.

கல்லூரியின் செயலர் சுமதி கிருஷ்ண பிரசாத் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முனைவர் வேதியியல் துறை இணைபேராசியர் மலர்விழி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் லட்சுமி முன்னுரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், கிராமப்புற பெண்கள் மேம்பாட்டுக்காக தொழிற்பயிற்சி அளித்தல் திறமையும், விருப்பமும் முயற்சியும் உள்ள பெண்களுக்கு அவர்கள் தொடங்க விரும்பும் தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல், தொழில் துவங்குவதற்கான வங்கி கடன் வாய்ப்புகளை கற்பித்தல், பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் துவங்குவதற்கான அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய மையத்தின் நோக்கத்தை பற்றி எடுத்துரைத்தார். கல்லூரி இயக்குனர் முனைவர் ஜெ.மஞ்சுளா தலைமை உரை ஆற்றினார்.



இயற்பியல் துறை தலைவர் மற்றும் இணை பேராசிரியர் முனைவர் அறம் பேசும் போது தன் உரையில் வீட்டு மின்சாதன பொருட்கள் சரியான முறையில் கையாளுதல் மற்றும் பழுதுபார்த்தல், சோப்பு, சலவைத்தூள், பினாயில் முதலான வீட்டு உபயோக பொருட்கள் செய்முறை, கைவினைப் பொருட்கள் செய்முறை கணிப்பொறி பயன்பாடு போன்ற பயிற்சிகள் கொடுக்கப்படும் என்று கூறினார். கணிதவியல் இணை பேராசிரியர் முனைவர் பத்மாவதி நன்றியுரை நல்கினார்.

மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன், துங்காவி ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி காளீஸ்வரன், கிராம பொதுமக்கள் மற்றும் வறுமை ஒழிப்போர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...