தாராபுரம் முதல் சென்னை வரை மீண்டும் பேருந்து சேவை தொடக்கம்

தாராபுரம் நகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து மாலை 7.00 மணிக்கு புறப்பட்டு காலை 5.30 சென்னைக்கும், சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து மாலை 7.00 மணிக்கு புறப்பட்டு காலை 5.30, தாராபுரத்திற்கும் புதிய பேருந்து வரும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.


திருப்பூர்: தாராபுரம் முதல் சென்னை வரை இயக்கப்பட்டு வந்த பேருந்து பல ஆண்டுகளாக வருவாய் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் பேருந்து சேவையை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.



திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் புதிய வழித்தடங்கள், புதிய பேருந்துகள் இயக்கம் மற்றும் நகரப்பேருந்து வழித்தட நீடிப்பு செய்து இயக்கும் பேருந்துகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.



இது குறித்து செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாவது, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து மாலை 7.00 மணிக்கு புறப்பட்டு காலை 5.30, சென்னைக்கும், அதே போல சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து மாலை 7.00 மணிக்கு புறப்பட்டு காலை 5.30, தாராபுரத்திற்கும் இந்த புதிய பேருந்து வந்தடையும். இந்த புதிய பேருந்து வசதிகளினால் இந்த பகுதியில் இருக்கும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், தாராபுரம் பகுதியிலுள்ள உடையார்பாளையத்திற்கு கூடுதலாக நகரப்பேருந்துகள் புதிதாக இரண்டு நடைகள் இயக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து ஏற்கனவே இயக்கப்பட்டிருந்த கோவை-திருச்செந்தூருக்கு இரண்டு புதிய பேருந்துகளும், ஊட்டி மண்டலத்திலிருந்து கூடலூர் திருச்சிக்கு 1 புதிய பேருந்தும், ஈரோடு மண்டலத்திலிருந்து அந்தியூர்- சென்னைக்கு 1 புதிய பேருந்துகளும் இயக்கப்பட இருக்கிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் புதிய வழித்தடங்களும், புதிய பேருந்துகளும் இயக்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது சார்பாகவும் இந்த பகுதியின் பொதுமக்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், திருப்பூர் மாநகராட்சி 4-ஆம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் நகர்மன்றத்தலைவர் பாப்புக்கண்ணன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் செல்வக்குமார் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...

கோவையில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு மற்றும் தொழில் வாய்ப்பு கருத்தரங்கம்

கோவையில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜூலை 17 அன்று நடைபெறுகிறது...

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...