உடுமலை அருகே சின்னகுமாரபாளையத்தில் தம்பதியினரை கட்டிபோட்டு நகை கொள்ளை – மூன்று பேர் கைது

சௌந்தர்ராஜனையும், அவரது மனைவியையும் கட்டிப்போட்டு 9 சவரன் தாலிக்கொடி, வைரக்கம்மல், இருசக்கர வாகனம் மற்றும் ரூ.24000 பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து நகைகளை மீட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சின்னகுமாரபாளையத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் சௌந்தரராஜன் குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருந்த போது, வீட்டின் கதவை யாரோ தட்டியதால் சௌந்தர்ராஜனும் அவரது மனைவியும் வெளியே வந்தபோது மூன்று பேர் அவர்களை கயிற்றால் கட்டியும், கத்தியை காட்டி மிரட்டியும் 9 சவரன் தாலிக்கொடி, வைரக்கம்மல், இருசக்கர வாகனம் மற்றும் பணம் 24000/- ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இச்சம்பவம் குறித்து அமராவதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த கொள்ளையர்களை பிடிக்க திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி உடுமலை துணை காவல் கண்காணிப்பாளரின் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் நிர்மலா தேவி, உதவி ஆய்வாளர்கள் சண்முக மூர்த்தி, பஞ்சலிங்கம் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்தும், சம்பவ இடத்திலிருந்த கைரேகை பதிவுகளை கொண்டு மர்மநபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட முருகானந்தம், சிவகுமார்,சித்திரை வேல் ஆகியோர் கைது செய்தனர். மேலும் கொள்ளையடிக்கபட்ட தாலிக்கொடி, வைரகம்மல் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...