போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து கிணத்துக்கடவு பகுதியில் அதிமுக மனித சங்கிலி போராட்டம்

கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்பு செயலாளாருமான செ.தாமோதரன் தலைமையில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.



கோவை: தமிழகத்தில் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்து வருவதை திமுக அரசு தடுக்க தவறியதாக கூறி தமிழக முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.



இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்பு செயலாளாருமான செ.தாமோதரன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.



இந்த போராட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் கைகளை கோர்த்து படி மனித சங்கிலியாக நின்று திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.



இதில் கிணத்துக்கடவு நகர அதிமுக செயலாளர் மூர்த்தி, பேரூராட்சி கவுன்சிலர் சிங் மற்றும் கார்த்திக் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....