உலக வரைபடங்களை அடையாளப்படுத்தும் கோவையை சேர்ந்த 2 வயது சிறுவன் – 10க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்று சாதனை

உலக வரைபடங்கள், கண்டங்கள், தேசிய கொடிகளின் பெயர்களை கூறி அசத்திய 2 வயது சிறுவன் சாய் சித்தார்த்துக்கு அமெரிக்கன் உலக சாதனை புத்தகம், வோர்ல்ட்ஸ் யங் ப்ரில்லியன்ட் என்ற பட்டத்தையும், லண்டன் ஹார்வர்ட் பல்கலைகழகம், பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.



கோவை: கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் ராஜலட்சுமி தம்பதி. இவர்களுடைய குழந்தை சாய் சித்தார்த்(2 வயது). மணிகண்டன் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் நிலையில் பல்வேறு விதமான புத்தகங்கள், இந்திய மற்றும் உலக வரைபடங்கள், தேசிய கொடிகள் என பொது அறிவு குறித்த கேள்விகளுக்கு தயாராகும் வகையில் வீட்டில் வாங்கி படித்து வருகிறார்.

இந்நிலையில் இவற்றை அடையாளம் காண்பதில் மழலை சிறுவன் சாய் சித்தார்த்தின் ஆர்வத்தை கண்ட மணிகண்டன் மற்றும் அவரது மனைவி சிறுவனுக்கு பயிற்சி அளித்துள்ளனர்.



இதில் அனைவரும் வியக்கும் வகையில் சிறுவன் சாய் சித்தார்த் உலக வரைபடங்கள் மற்றும் கண்டங்கள், தேசிய கொடிகளின் பெயர்களை கூறி அசத்தியுள்ளார். இவரது இந்த சாதனையை பாராட்டி அமெரிக்கன் உலக சாதனை புத்தகம் வோர்ல்ட்ஸ் யங் ப்ரில்லியன்ட் என்ற பட்டத்தையும், லண்டன் ஹார்வர்ட் பல்கலைகழகம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரபடுத்தி உள்ளது.

இதே போல பல்வேறு உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்த இரண்டு வயது குழந்தை சாய் சித்தார்த்தை பல்வேறு தரப்பினரும் தற்போது பாராட்டி வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...