தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல்

நானும் கிராமப்புற சூழலில் இருந்து தான் கல்வி கற்று வந்தேன். எனக்கு ABCD யை 6 ஆம் வகுப்பில் தான் கற்றுத்தந்தனர் என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி ஊக்கப்படுத்தி பேசினார்.


கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் 43 ஆவது பட்டமளிப்பு விழா இன்று (9.3.2024) நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவிற்கு முந்தைய நாள், பல்கலை கழக வளாகத்தில் பதக்கம் வென்றுள்ள மாணவர்கள் மற்றும் பிற மாணவர்களுடன் ஆளுநர் 1 மணி நேரத்திற்கும் மேலாக கலந்துரையாடினார்.

100 பேருக்கும் அதிகமானோர் இருந்த அரங்கத்தில், ஆளுநர் ரவியிடம், பல்கலையின் துணை வேந்தர் கீதாலஷ்மி முன்னிலையில், எந்த பயமும் இன்றி துணிவாக ஒரு மனைவி தனது பயணத்தை பற்றி பேசிவந்தார்.

பல்கலையில் இளநிலை தோட்டக்கலை பயிலும் மாணவி செல்வி, ஆளுநரிடம் தனது கல்வி பயணம் பற்றியும், ஆங்கிலம் மீது தனக்கு இருக்கும் ஆர்வம் பற்றியும் பேசினார்.

செல்வி கற்றுகிராமப்புறத்தில் இருந்து வரும் மாணவி. தமிழ் வழி கல்வி கற்ற அவர் பள்ளியிலிருந்தே ஆங்கிலம் பேச ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அது சிரமமாக இருந்துள்ளது என்பதால் பின் நாட்களில் ஆங்கிலம் பேச பயிற்சி (Spoken English) எடுத்துள்ளார். ஆங்கில மொழி கற்பதற்கான பிற முயற்சிகளை எடுத்துள்ள அவர், அதை பற்றி ஆளுநரிடம் தைரியமாக தன்னால் முடிந்த அளவு சிறப்பாக பேசிக்கொண்டிருந்த போது சில நொடி லேசாக தடுமாறி நின்றார்.

ஆளுநர் முன்னர் பேசுகிறோம் என்ற அச்சமோ அல்லது அரங்கம் நிறைய ஆட்கள் உள்ளனர் என்ற கூச்சமோ எதுவும் இல்லாமல் துணிவாக பேசிய அவர், லேசாக தடுமாறியதும், ஆளுநர் ரவி குறுக்கிட்டு "நீங்கள் சரியாக தான் பேசிவருகின்றீர்கள். சொல்லப்போனால் நீங்கள் பேசும் ஆங்கிலம் அவ்வளவு அழகாக உள்ளது," என்றார்.

அதன் பின்னர் பேசிய அவர் நானும் கிராமப்புற சூழலில் இருந்து தான் கல்வி கற்று வந்தேன். எனக்கு ABCD யை 6 ஆம் வகுப்பில் தான் கற்றுத்தந்தனர் என்று கூறினார். அதன் பின்னர் மாணவியின் முயற்சிகளை பாராட்டி, தொடர்ந்து தைரியமாக பேசுமாறு ஊக்கப்படுத்தினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...