தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல்

நானும் கிராமப்புற சூழலில் இருந்து தான் கல்வி கற்று வந்தேன். எனக்கு ABCD யை 6 ஆம் வகுப்பில் தான் கற்றுத்தந்தனர் என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி ஊக்கப்படுத்தி பேசினார்.


கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் 43 ஆவது பட்டமளிப்பு விழா இன்று (9.3.2024) நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவிற்கு முந்தைய நாள், பல்கலை கழக வளாகத்தில் பதக்கம் வென்றுள்ள மாணவர்கள் மற்றும் பிற மாணவர்களுடன் ஆளுநர் 1 மணி நேரத்திற்கும் மேலாக கலந்துரையாடினார்.

100 பேருக்கும் அதிகமானோர் இருந்த அரங்கத்தில், ஆளுநர் ரவியிடம், பல்கலையின் துணை வேந்தர் கீதாலஷ்மி முன்னிலையில், எந்த பயமும் இன்றி துணிவாக ஒரு மனைவி தனது பயணத்தை பற்றி பேசிவந்தார்.

பல்கலையில் இளநிலை தோட்டக்கலை பயிலும் மாணவி செல்வி, ஆளுநரிடம் தனது கல்வி பயணம் பற்றியும், ஆங்கிலம் மீது தனக்கு இருக்கும் ஆர்வம் பற்றியும் பேசினார்.

செல்வி கற்றுகிராமப்புறத்தில் இருந்து வரும் மாணவி. தமிழ் வழி கல்வி கற்ற அவர் பள்ளியிலிருந்தே ஆங்கிலம் பேச ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அது சிரமமாக இருந்துள்ளது என்பதால் பின் நாட்களில் ஆங்கிலம் பேச பயிற்சி (Spoken English) எடுத்துள்ளார். ஆங்கில மொழி கற்பதற்கான பிற முயற்சிகளை எடுத்துள்ள அவர், அதை பற்றி ஆளுநரிடம் தைரியமாக தன்னால் முடிந்த அளவு சிறப்பாக பேசிக்கொண்டிருந்த போது சில நொடி லேசாக தடுமாறி நின்றார்.

ஆளுநர் முன்னர் பேசுகிறோம் என்ற அச்சமோ அல்லது அரங்கம் நிறைய ஆட்கள் உள்ளனர் என்ற கூச்சமோ எதுவும் இல்லாமல் துணிவாக பேசிய அவர், லேசாக தடுமாறியதும், ஆளுநர் ரவி குறுக்கிட்டு "நீங்கள் சரியாக தான் பேசிவருகின்றீர்கள். சொல்லப்போனால் நீங்கள் பேசும் ஆங்கிலம் அவ்வளவு அழகாக உள்ளது," என்றார்.

அதன் பின்னர் பேசிய அவர் நானும் கிராமப்புற சூழலில் இருந்து தான் கல்வி கற்று வந்தேன். எனக்கு ABCD யை 6 ஆம் வகுப்பில் தான் கற்றுத்தந்தனர் என்று கூறினார். அதன் பின்னர் மாணவியின் முயற்சிகளை பாராட்டி, தொடர்ந்து தைரியமாக பேசுமாறு ஊக்கப்படுத்தினார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...