கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தாராபுரத்தில் 224 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா

அமைச்சர் கயல்விழி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வருவாய்த்துறையின் சார்பில் 224 பயனாளிகளுக்கு ரூ.4.89 கோடி மதிப்பீட்டில் விலையில்லா வீட்டு மனைப்பட்டாகளை வழங்கினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 224 பயனாளிகளுக்கு ரூ.4,89,08,160 மதிப்பீட்டில் விலையில்லா வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.

இதில் பங்கேற்ற ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். எந்தவொரு திட்டமானலும் மக்களுக்கு தேவையான திட்டங்களை உடனடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முழுக்கவனம் எடுத்து அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து அதிகமாக பட்டாக்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட பொறுப்பாளர்களை வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அட்டை பெற்றால் 1500-க்கு மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறலாம். எனவே, அனைவரும் மருத்துவ காப்பீட்டு அட்டையை பெற வேண்டும். பெண் குழந்தைகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000/- வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டம் மாணவர்களுக்கு உயர் கல்வி கற்க உதவியாக இருக்கிறது. அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின்பு பட்டப்படிப்பு படிப்பதற்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம் மூலம் படித்த இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்கு 35 சதவீதம் அரசு மானியமாகவும், 65 சதவீதம் முதலீடாவும் தொழில் தொடங்கலாம்.

மேலும் குறு, சிறு, நடுத்தர தொழில் துறை மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. படித்த இளைஞர்கள் கட்டாயம் தொழில் தொடங்க முயற்சி செய்ய வேண்டும். முதலமைச்சர் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக் கொடுப்பதாக அறிவித்துள்ளார்கள். ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் வீடு இல்லாதவர்கள் பதிவு செய்து பயன்பெறலாம். 2023-24 நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் ஏழை எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்த வருகிறார்கள். இத்திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களில் 224 நபர்களுக்கு முதல் கட்டமாக இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.

அந்த வகையில், இன்றைய தினம் 224 பயனாளிகளுக்கு ரூ.4,89,08,160/- மதிப்பீட்டில் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் நகர்மன்றத்தலைவர் பாப்புக்கண்ணன், திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபாவதி பெரியசாமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...