நீர்நிலைகள் சுத்தம் செய்தல் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (28.03.2017) மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள் சுத்தம் செய்தல் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இவ்வாய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில்,

கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை சுத்தமாகவும், பேணிபாதுகாப்பது மிக அவசியமாகும். மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளோடு பொதுமக்களும் கைகோர்த்து நீர்நிலைகளை பேணிகாப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். நீர்நிலைகளில் கட்டிடக்கழிவுகள் கொட்டுவது, பிளாஸ்டிக்கழிவுகள் மற்றும் திட, திரவுக்கழிவுகள் கொட்டுவதென்பது தடுக்கப்பட வேண்டும். மேலும், அவ்வாறு ஈடுபடுபவர்கள் மீது அபராதம் விதிப்பதுடன் விதிகளின்படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும், பொதுமக்கள் தங்களது பட்டா நிலங்களில் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். தவறுபவர்களின் மீது அவற்றிற்குண்டான அபாராதம் விதிக்கப்படும். தமிழக அரசு, தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கோவை மாவட்டத்திலுள்ள குளங்கள் தூய்மை படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றது. எனவே, பொதுமக்களும் குளங்களை பாதுகாக்கும் மற்றும் தூய்மைபடுத்தும் பணிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிதம்பரம், பொதுப்பணித்துறை, குடிசை மாற்று வாரியம், மாநகராட்சி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...