பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவில் தீச்சட்டி எடுத்து வந்த பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில் வழங்கிய இஸ்லாமியர்கள்

கோட்டூர் சாலையில் அமைந்துள்ள ஷாபியா மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள் தீச்சட்டி எடுத்து வந்த பக்தர்கள் மற்றும் உறவினர்களுக்கு தண்ணீர் பாட்டில் மற்றும் குளிர் பானங்களை வழங்கினர்.


கோவை: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் பூவோடு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி நகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.



CTC காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தீச்சட்டி எடுத்து வந்தபோது கோட்டூர் சாலையில் அமைந்துள்ள ஷாபியா மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள் மத நல்லினத்தை வலியுறுத்தியும், இந்து இஸ்லாமியர் என்ற மத வேறுபாடுகளை கலைந்து தீச்சட்டி எடுத்து வந்த பக்தர்கள் மற்றும் உறவினர்களுக்கு தண்ணீர் பாட்டில் மற்றும் குளிர் பானங்களை வழங்கி தாகம் தனித்து வழி அனுப்பி வைத்தனர்.

இதை மகிழ்வுடன் பக்தர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

Newsletter

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...