கோவையில் தென்னையில் வாடல் நோய் குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கள ஆய்வு

தென்னையில் வாடல் நோய் கள ஆய்விற்காக துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி இன்று (01.03.2024) பூசனைகோந்தள்ளி, குளத்துபுதூர் மற்றும் சோமந்துறை கிராமங்களில் உள்ள விவசாயிகளை நேரில் கண்டு கலந்துரையாடினார்.


கோவை: கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் தென்னையில் வாடல் நோய் பரவலாக தாக்கி தேங்காய் உற்பத்தியை பெருமளவில் பாதித்துள்ளது.



இது குறித்து தகவல் சேகரிக்கவும் இந்த நோயை கட்டுப்படுத்த கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் பற்றி தெரிவிக்கவும் கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு மற்றும் ஆனைமலை ஆகிய மூன்று வட்டாரங்களில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், விவசாயிகள் மற்றும் அரசு வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இன்று முதல் மூன்று நாட்கள் (மார்ச் 01-03, 2024) கள ஆய்வு மேற்கொண்டுள்ளது.



இந்த கள ஆய்வில் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், வேளாண் அலுவலர்கள், ஆராய்ச்சி உதவியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இந்த கள ஆய்விற்காக துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி இன்று (01.03.2024) பூசனைகோந்தள்ளி, குளத்துபுதூர் மற்றும் சோமந்துறை கிராமங்களில் உள்ள விவசாயிகளை நேரில் கண்டு கலந்துரையாடினார்.



இந்த ஆய்வில் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சார்ந்த விவசாயப் பெருமக்களின் தென்னந்தோப்பில் எத்தனை மரங்கள் வேர் வாடல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன, சேதாரத்தின் மதிப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் போன்ற தகவல்களைச் சேகரித்து ஆய்வறிக்கை தயார் செய்து அரசுக்கு சமர்ப்பிக்கப்படும்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...