உடுமலை அருகே கிராமப்புறங்களில் நாய் கடித்து 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்- அரசு மருத்துவமனையில் அனுமதி

பெரிய வட்டாரம், கழுகரை, ஐஸ்வர்யா நகர், போத்த நாயக்கனூர், சால்ரப்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு வெறிநாய்கள் துரத்தி கடித்ததில் குழந்தைகள், பெரியவர்கள் என 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளான பெரிய வட்டாரம், கழுகரை, ஐஸ்வர்யா நகர், போத்த நாயக்கனூர், சால்ரப்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பொதுமக்களை அப்பகுதிகளில் சுற்றி திரிந்த வெறிநாய்கள் துரத்தி கடித்ததில் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.



இந்த நிலையில் தற்பொழுது பாதிக்கப்பட்ட அனைவரும் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகத்தினர் இப்பகுதியில் சுற்றி திரியும் வெறிநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மடத்துக்குளம் பகுதியில் வெறிநாய்கள் கடித்து 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...