ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியும் ஸ்ரீ ராம்ஸ் வாலிபால் அகாடமியும் இணைந்து வாலிபால் வீரர்கள் தேர்வு வரும் ஏப்ரல் 5, 6ம் தேதிகளில் நடைபெறவுள்ளது

கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியும் ஸ்ரீ ராம்ஸ் வாலிபால் அகாடமியும் இணைந்து நடத்தும் வாலிபால் வீரர்கள் தேர்வு வரும் ஏப்ரல் 5 மற்றும் ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் காலை 7.30 மணி அளவில் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லாரியில் உள்ள வாலிபால் மைதானத்தில் அர்ஜுனா மற்றும்  துரோணச்சார்யா விருது பெற்ற இந்திய சீனியர் வாலிபால் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ஜி.இ.ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் சர்வதேச வாலிபால் வீரர் வி.சி.ராமலிங்கம் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற உள்ளது.

வாலிபால் தேர்வுக்கு வரும் வீரர்கள் பிளஸ்-2 தேர்ச்சியடைந்த அல்லது கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படித்த அல்லது இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்ற மாணவர்ககளாக இருத்தல் வேண்டும். மேலும் விளையாட்டு வீரர்களின் குறைந்தபட்ச உயரம்190 செ.மீ. ஆகும்.

வாலிபால் அகாடமியில் தேர்வு பெறும் வீரர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணா காலைக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு, வாலிபால் விளையாட்டுக்குரிய அனைத்துவகை சீருடை, உணவு, இருப்பிடம் ஆகியன இலவசமாக வழங்கப்பட்டு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.

வாலிபால் தேர்வுக்கு வரும் வீரர்களுக்கு ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 6 வரை உணவு மற்றும் தங்கும் வசதி இலவசமாக கல்லூரி விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வாலிபால் விளையாட்டில் ஆர்வமும், திறமையும் உள்ள இளம் வீரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கல்லூரியின் முதல்வர் பெ. பாபா ஞானக்குமார் மற்றும் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ஆர்.சரவணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

மேலும் தகவலுக்கு தொடர்புக்கு் 09894170112  அல்லது 09894648915 என்ற தொலைபேசி எண்ணிற்கோ அல்லது [email protected][email protected] என்னும் இணையதள முகவரிக்கோ தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...