பாசஞ்சர் ரயில்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 லிருந்து ரூ.10 ஆக குறைப்பு - கோவை ரயில் நிலையம் அறிவிப்பு

கோவையில் இருந்து ஈரோடு, மேட்டுப்பாளையம், பாலக்காடு ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில்களின் குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை ரயில் நிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, பாசஞ்சர் ரயில்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 30 லிருந்து 10 ஆக குறைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பேரிடர் காலகட்டத்தில் பஸ், ரயில்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் பயணிகள் பாசஞ்சர் ரயில்கள் விரைவு ரயிலாக மாற்றப்பட்டன. இதன் காரணமாக குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 10 ல் இருந்து ரூபாய் 30 ஆக அதிகரிக்கப்பட்டது. கொரோனா முடிந்து இயல்பு நிலை திரும்பிய பின்னரும் கட்டணம் குறைக்கப்படவில்லை. இதனால் ரயில்களில் தினமும் பயணம் செய்யும் பயணிகள் இந்த கட்டணத்தை குறைத்து மீண்டும் பழைய கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் என ரயில்வேக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் பாசஞ்சர் ரயில்களின் குறைந்தபட்ச கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 200 கிலோமீட்டர் தூரத்திற்கு குறைவாக செல்லும் பாசஞ்சர் ரயில்களின் இந்த கட்டணம் குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்திருக்கிறது. கொரோனா காலக் கட்டத்திற்கு முன்பு இருந்ததைப் போன்று பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் பாசஞ்சர் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம், ஈரோடு, பொள்ளாச்சி, பாலக்காடு, பழனி, கண்ணனூர், உள்ளிட்ட இடங்களுக்கு பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் கோவை மேட்டுப்பாளையம் பாஸஞ்சரில் குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 30 வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கோவை மேட்டுப்பாளையம் இடையே எங்கு ஏரி இறங்கினாலும் ரூபாய் பத்து மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும். இதனால் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும் போது கோவையில் இருந்து ஈரோடு, மேட்டுப்பாளையம், பாலக்காடு ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில்களின் குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு காலை ஐந்தே கால் மணிக்கு மற்றும் மாலை 6:45 மணிக்கு இயக்கப்படும் பேசஞ்சர் ரயில்கள் குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றனர்.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...