பெரியநாயக்கன்பாளையத்தில் மாவட்ட அளவிலான ஜூனியர் மற்றும் ஓப்பன் செஸ் போட்டிகள்-500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஜூனியர் மற்றும் ஓப்பன் செஸ் போட்டியில் 5 வயது முதல் 70 வயது வரையிலான 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்த நாள் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்ட அ.இ.அ.தி.மு.க மற்றும் நண்பர்கள் சதுரங்க குழு இணைந்து மாவட்ட அளவிலான ஜூனியர் மற்றும் ஓப்பன் செஸ் போட்டிகளை நடத்தியது.



கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவை புறநகர் மாவட்ட செயலாளர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் 5 வயது முதல் 70 வயது வரையிலான 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.



ஜூனியர் மற்றும் மற்றும் ஓப்பன் போன்ற பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற 100க்கும் மேற்பட்டோருக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. மேலும் ஏற்கனவே செஸ் போட்டிகளில் தேசிய அளவில் சாதனைகள் புரிந்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் கே.வி.என்.ஜெயராமன், கூடலூர் நகரச் செயலாளர் குருந்தாசலம், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி செயலாளர் ரகுநாதன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சசிக்குமார், வீரபாண்டி பேரூராட்சி செயலாளர் ராமராஜ், ஒன்றியக் கவுன்சிலர் மாணிக்கம், கோவை மாவட்ட சதுரங்க கழக இணைச் செயலாளர் ஆறுமுகம் உள்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...