வடகோவை ரயில்வே ஸ்டேஷன் மறுசீரமைப்பு பணி வேகமெடுக்கும் என எதிர்ப்பார்ப்பு

வரும் 26ம் தேதி, நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படும் 554 ரயில்வே ஸ்டேஷன்கள், 1,500 ரயில்வே மேம்பாலங்கள், கீழ்பாலங்களுக்கு அடிக்கல் நாட்டுவிழா, திறப்புவிழா மற்றும் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நடக்கவுள்ளது.


கோவை: கோவை சந்திப்புக்கு அருகிலுள்ள, வடகோவையில் மேலும் இரண்டு நடைமேடைகளை அமைத்து, விரிவாக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதன் முதற்கட்டமாக, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், வடகோவை மற்றும் போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன்களை மேம்படுத்த, முறையே ரூ.7.5 கோடி மற்றும் ரூ.24 கோடியும் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், வரும் 26ம் தேதி, நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படும் 554 ரயில்வே ஸ்டேஷன்கள், 1,500 ரயில்வே மேம்பாலங்கள், கீழ்பாலங்களுக்கு அடிக்கல் நாட்டுவிழா, திறப்புவிழா மற்றும் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நடக்கவுள்ளது.

விழாவில், பிரதமர் மோடி பங்கேற்று, காணொளியில் இவற்றைத் துவக்கி வைக்கிறார். இந்த பட்டியலில், ஆகஸ்டில் துவங்கி நடந்து வரும் வடகோவை ரயில்வே ஸ்டேஷன் மேம்பாட்டுப் பணியும் சேர்க்கப்பட்டுள்ளது. வடகோவை ரயில்வே ஸ்டேஷன் மேம்பாட்டுப் பணி, வரும் மே 31க்குள் முடிவடையுமென்று, தெற்கு ரயில்வே, செய்திக்குறிப்பில் ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பணிகள் அதற்குள் முடியுமா என்பது சந்தேகமாகவுள்ளது. பிரதமர் துவக்கி வைக்கும் திட்டப்பணிகள் பட்டியலில் இந்த ஸ்டேஷனும் சேர்ந்திருப்பதால், இனியாவது சீரமைப்பு வேலைகள் வேகமெடுக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...