கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் 23 அடியாக சரிவு – நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்பு

கடந்த வாரத்தில் 26 அடியாக இருந்த சிறுவாணி அணையின் நீா்மட்டம், நேற்று சனிக்கிழமை நிலவரப்படி 23 அடியாக சரிந்துள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்பதால், அணையின் நீா்மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: கோவை மாநகரில் 26 வார்டுகள், நகரையொட்டியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சிறுவாணி அணை பிரதான குடிநீா் ஆதாரமாக உள்ளது. 49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து நாள்தோறும் குடிநீருக்காக 10 கோடி லிட்டா் (100 எம்.எல்.டி) தண்ணீா் எடுக்கப்பட்டு வந்தது.

கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்ததால் அணையின் நீா்மட்டம் 20 அடிக்குமேல் உயராமல் காணப்பட்டது. இதனால், சிறுவாணி அணையில் இருந்து குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்ட வார்டுகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகள் மூலமாக தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது.

இந்நிலையில், நவம்பா், டிசம்பா் மாதங்களில் வடகிழக்குப் பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீா்மட்டம் 32 அடி வரை உயா்ந்தது. அதற்கு மேல் நீா்மட்டம் உயரவில்லை. நடப்பாண்டு ஜனவரி மாத இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அணையின் நீா்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் 26 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம், சனிக்கிழமை நிலவரப்படி 23 அடியாக சரிந்துள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்பதால், அணையின் நீா்மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...