கோவை உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் நாய் தொல்லை - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஒண்டிப்புதூா், சீரநாயக்கன்பாளையம் பகுதிகளில் இயங்கி வரும் நாய்கள் கருத்தடை மையங்களுடன், கூடுதலாக கருத்தடை மையங்களை ஏற்படுத்தி மாநகரில் நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாநகரப் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக உக்கடம், கரும்புக்கடை, குனியமுத்தூா், ராமநாதபுரம், புலியகுளம், சரவணம்பட்டி, சாய்பாபா காலனி உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாகச் சுற்றி வருகின்றன.

மாநகரப் பகுதிகளில் சாலைகளில் சுற்றும் தெருநாய்களால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இரவுப் பணி முடித்து இருசக்கர வாகனங்களில் செல்வோரை நாய்கள் கூட்டம் துரத்துவதால், விபத்துகள் ஏற்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மாநகராட்சி நிர்வாகம் நாய்களைப் பிடித்து கருத்தடை செய்யும் பணியில் தற்போது சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், மாநகரில் நாய்கள் தொல்லை மேலும் அதிகரித்து வருகிறது.

எனவே ஒண்டிப்புதூா், சீரநாயக்கன்பாளையம் பகுதிகளில் இயங்கி வரும் நாய்கள் கருத்தடை மையங்களுடன், கூடுதலாக கருத்தடை மையங்களை ஏற்படுத்தி மாநகரில் நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் இன்று (பிப்.19) கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...